லண்டன் விரையும் ஸ்டாலின்.. முதல்வராகும் உதயநிதி..? கோட்டை வட்டார பரபரப்பு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் உதயநிதி ஸ்டாலின் தற்காலிக முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளது.

கவனத்தை ஈர்த்த ஆய்வு கூட்டம்தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக இன்று, தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேறெந்த அமைச்சர்களும் உடன் இல்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்தது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அரசு செயலாளர்களும், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
12 துறை 51 திட்டங்கள் குறித்து சிறப்பு ஆலோசனைதமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும், மிக முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டப் பணிகள் துறை வாரியாகத் தொகுக்கப்பட்டு ‘முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ என ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று நடைபெற்ற முதலாவது ஆய்வுக் கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல், சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, பள்ளிக் கல்வி, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, கால்நடை, பால் உற்பத்தி மற்றும் மீன்வளம், பொதுத் துறை மற்றும் மறுவாழ்வு, உயர்க் கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வருவாய் ஆகிய 12 துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 51 திட்டங்கள் குறித்தும், 19 எதிர்கால திட்டங்கள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் ஒப்படைப்புஅப்போது துறைச் செயலாளர்கள் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து, விளக்கப் படங்கள் வாயிலாக எடுத்துரைத்தனர். அப்போது முதலமைச்சர், அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து, அவற்றில் சுணக்கம் ஏற்படாத வண்ணம் கண்காணித்து, அவற்றை முழுமையாகவும், விரைந்தும் முடிக்க துறைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.அதோடு, புதிய திட்டங்களை அறிவிப்பதில் உள்ள ஆர்வம், அவற்றை விரைந்து நிறைவேற்றுவதிலும் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை ஆய்வுமேலும், திட்டத்தினைச் செயல்படுத்தும்போது காலதாமதம் ஏற்படின், அது திட்டச் செலவினத்தை அதிகப்படுத்துவதோடு, பொது மக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும், திட்டங்களுக்கான வடிவமைப்பு மற்றும் ஒப்பந்தப் பணிகளை விரைவாக இறுதி செய்து, இன்னும் துவங்காத பணிகளைத் துவக்கி, அவற்றைத் துரிதமாகவும், தரமாகவும் முடித்திடவும் அனைத்துத் துறை அரசுச் செயலாளர்களையும், துறைத் தலைவர்களையும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதோடு ஆய்வு செய்யப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இடைத்தேர்தலுக்கு பிறகு சம்பவம்இந்த நிலையில், முதல்வரின் இந்த சிறப்பு திட்ட அமலாக்க ஆலோசனை அடுத்த சில காலங்களுக்கு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கிய டாஸ்க்காக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வரின் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்து இருந்ததும் ஊகங்களுக்கு வழி வகுத்தது. அதுகுறித்து அலசியபோது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் மாதத்தில் சிகிச்சைக்காக லண்டன் செல்லவிருப்பதாக தகவல் தெரிய வந்தது. ஆகையால், எப்போது வேண்டுமானாலும் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளது என்றும் கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் உடல் பரிசோதனைக்காக லண்டன் செல்வது வாடிக்கை. ஆனால், கொரோனா காலகட்டம் மற்றும் தேர்தல் காரணமாக சில ஆண்டுகளாக அவரால் செல்ல முடியவில்லை. கடந்தாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பின்னர் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.