பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன செலவு அதிகரிக்கப்படுகிறது: மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் பேச்சு

டெல்லி: பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை அளித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன செலவு அதிகரிக்கப்படுகிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளர்.

உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்திய என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வளர்ச்சிக்கான தேவை மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை மனதில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதர்மன் கூறியுள்ளார்.

வேலை வாய்ப்பை ஏற்படுத்த சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளர்.  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மூலதன செலவு அதிகரிக்கப்படுகிறது. வளர்ச்சிக்கான தேவை, பொருளாதார ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை ஏற்படுத்த சிறு, குறு தொழில்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்பு, வரி விதிப்பு ஆகியவை தொடர்பாக என்னென்ன பலன்களை பட்ஜெட் கொடுத்திருக்கிறது என்பது குறித்து பட்டியலிட்டு பட்ஜெட் விவாதம் தொடர்பான பதிலுரையில் நிர்மலா சீதாராமன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.