அக்ஷய் துங்கா என்ற நபர் ஆன்லைன் தளங்களில் மிகவும் விலை உயர்ந்து போன்களை வாங்குவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை பற்றி கூறியுள்ளார். அவர் அமேசான் மூலமாக ஆப்பிள் ஐபோன் 14 மாடலின் தலைசிறந்த மாடலாக இருக்கக்கூடிய
iPhone 14 Pro Max
போனை ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் போலியான ஐபோன் 14 ப்ரோ அவருக்கு கிடைத்ததால் நேரடி Apple Store சென்று வாங்காமல் தவறு செய்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் போனை திறந்த ‘Switch ON’ செய்ததும் அதில் ஏற்கனவே
WhatsApp, Twitter, Facebook
போன்ற ஆப் ஏற்கனவே
Install
செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கேமரா திறந்ததில் அதில் Portrait Mode வசதி இல்லாமல் இருந்துள்ளது. அந்த போன் பார்ப்பதற்கு
Apple iphone 14 Pro Max
போனை போன்றே ஆச்சு அசலாக உள்ளது. மேலும் பெட்டியில் ஐபோன் உள்ளே இருக்கும் அனைத்து பொருட்களும் இருந்தன.
இந்த கருவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக அதன் Serial Number எடுத்து Apple.com மூலம் சோதனை செய்து பார்த்ததில் போன் பற்றிய விவரம் எதுவும் கட்டப்படவில்லை. இதையடுத்து நேரடியாக Apple Store சென்று பார்த்துள்ளார். அங்கு இருக்கும் ஆப்பிள் நிர்வாகிகள் போலியானது என்று தெரிவித்துவிட்டனர். சீரியல் எண் சரியாக இருந்தும் அது ஏன் காட்டவில்லை என்றால் அதற்கு காரணம் அது அமெரிக்க மாடலாக உள்ளது. அதில் USB-Type C சார்ஜ்ர் பதிலாக USB -லைட்னிங் சார்ஜ்ர் இருந்துள்ளது.
இதை Appario என்ற விற்பனையாளரிடம் இருந்து வாங்கியுள்ளார். இவர்கள் Amazon நிறுவனத்திற்கு Apple பொருட்களை விற்பனை செய்பவர்கள். எப்போதும் ஐபோன் போன்ற மிக விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்கவேண்டும். முடிந்த அளவிற்கு அதிகாரபூர்வ இணையதளங்கள் அல்லது நேரடி கடைகளில் ஐபோன் வாங்குவது நமக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்