அதானி பங்குகள் சரிவு; நிர்மலா சீதாராமன் பதில்!

2023 வது ஆண்டிற்கான பட்ஜெட்டில் புதிய வருமான வரி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; புதிய வருமான வரி திட்டத்தின் படி பட்ஜெட்டில் அறிவித்தது போல 3 லட்சம் வரைக்கும் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் எந்தவிதமான வரியையும் செலுத்த தேவையில்லை.

3 ல் இருந்து 6 லட்சம் வரைக்கும் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 5 சதவீத வரியும், 6-9 லட்சம் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரியும் நிர்ணயம் செய்யயப்பட்டது. அதே போல, 9-12 லட்சம் வருமானம் உடையவர்கள் 15 சதவீத வரியை செலுத்துவர். 12-லிருந்து 15 லட்சம் வரைக்கும் வருமானம் உடையவர்ககளுக்கு 20 சதவீத வரியும், ஆண்டு வருமானம் 15 லட்சத்திற்கு மேல் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

கர்ஜித்த கரூர் எம்பி ஜோதிமணி… 9 வருஷம் ஆனாலும் மறக்கமாட்டோம் என ஆவேசம்!

இந்த புதிய வரி விதிப்பு முறைகளால் நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும், அவர்களின் கைகளில் பணம் இருந்து கொண்டே இருப்பதற்கு இது வலுவாக்கும் என குறிப்பிட்டார். அரசாங்கத்தின் திட்டங்கள் மூலம் ஒரு தனி நபரை குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்ய எந்தவிதமான தூண்டுதல்களும் செய்யபடவில்லை. அதே நேரத்தில் அவர்களின் முதலீடு குறித்து அவர்களே முடிவு எடுக்க வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பொருளாதாரம் சீராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஏற்கனவே கூறி இருந்தார். மேலும், முதலீட்டு செலவினத்தை அதிகரிப்பதன் மூலம் தனியார் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் பேசி இருந்தார். விவசாயத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதன் மூலம் அவர்களது வருமானம் பெருகும் எனவும் தெரிவித்த இருந்தார்.

பிரதமர் மோடியின் ஹெல்த் டிப்ஸ்; பிஸியோதெரபி உடன் யோகா கத்துக்கோங்க!

இந்நிலையில், அதானி குழுமத்தின் மீதான குற்றசாட்டுகள் எழுந்ததில் இருந்து அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தது மட்டும் இல்லாமல், அதானியின் சொத்து மதிப்பும் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. மேலும், இந்திய வங்கிகள் அதானிக்கு அதிக அளவிலான கடன்களை கொடுத்து பக்கமலமாக இருப்பதாக வந்த குற்றசாட்டுகள் குறித்தும் கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன்; இந்தியாவின் சட்ட திட்டங்கள் சரியான பாதைகளில் பயணிக்கிறது. இந்த விஷயத்தில் மட்டும் இல்லாது அனைத்து துறைகளிலும் ஒழுங்கு முறையில் சிறந்து விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்; 2023 மற்றும் 24 நிதி ஆண்டிற்கான ரீடைல் பணவீக்கத்தை பொறுத்தவரை 5.3 சதவீதமாக இருக்க கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதற்கு கீழே வருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.