பிரதமர் முன்பு டீ விற்றார்..இப்போது பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்.!

பாஜகவை வங்க கடலில் தூக்கி எறிய வேண்டும் என கடுமையாக சாடியவர் தெலங்கான முதல்வர் சந்திரசேகர ராவ். ஒன்றிய பாஜக அரசை தீவிரமாக எதிர்த்து வரும் கேசிஆர், பிரதமரின் மாநில வருகையின்போது பலமுறை கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். ஒரு முறை நிர்மலா சீதாராமன் தெலங்கான வந்த போது, அங்கிருந்த ரேஷன் கடையில் பிரதமரின் படம் இல்லை என மாவட்ட ஆட்சியரை கடுமையாக சாடினார்.

அதற்கு எதிர்வினை ஆற்றிய கேசிஆரின் தொண்டர்கள், சிலிண்டர் எரிவாயின் விலை ஏற்றத்தை குறிக்கும் வகையில் சிலிண்டரில் பிரதமரின் படம் வைத்து காட்சிபடுத்தினர். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இவ்வாறு பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் கேசிஆர், தற்போது பாஜகவை ஆதரித்தால் தாலிபான்கள் நிலை இந்தியாவிற்கு வரக்கூடும் என எச்சரித்துள்ளார்.

பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் முன்னணியை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அந்தவகையில் ஹைதராபாத்தில் உள்ள கம்மம் நகரில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற பாரதிய ராஷ்டிர சமிதியின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர், சிபிஎம் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐயின் டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய அரசியலில் கேசிஆர் முன்னேறுவதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்டி குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை (மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம்) மேற்கொண்டு வருவதால் அவர் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என கூறினார்.

கேசிஆர் மேலும் ஒரு நகர்வை செய்தார். ஒடிசாவின் முன்னால் முதல்வர் கிரிதர் காமாங் மற்றும் அவரது மகன் சிஷிர் காமாங் உடன் மேடையை பகிர்ந்து கொண்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு ஒடிசாவின் பழங்குடி தலைவரும், முன்னாள் முதல்வருமான கிரிதர் காமாங் கலந்து கொண்டார். தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகிய பின்பு கேசிஆருடன் கைகோர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பிரதமர் டீ விற்றதைபோல பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவருவதாக தெலங்கானா அமைச்சர் கூறியுள்ளார். மாநில சட்டப்பேரவையில் தெலங்கானா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி பேசும்போது, ‘‘பிரதமர் மோடி சிறுவயதில் டீ விற்று வந்தார். முதலில் முதல்வர் ஆனவர், பின்னர் பிரதமரானார். இப்போது நாம் அனைவரும் அவரை தலைவராக நம்பியது துரதிர்ஷ்டவசமானது.

கர்ஜித்த கரூர் எம்பி ஜோதிமணி… 9 வருஷம் ஆனாலும் மறக்கமாட்டோம் என ஆவேசம்!

பிரதமர் மோடி பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார். அவர் எப்போதும் விற்க தயாராக இருக்கிறார். டீ விற்பதைப் போலவே பொதுத்துறை நிறுவனங்களையும் அவர் விற்பனை செய்து வருகிறார். நிதிஅமைச்சர் நிர்மலாம்மா அதற்கு துணையாக இருக்கிறார்’’ என அவர் தெரிவித்தார். அமைச்சரின் பேச்சு சட்டப்பேரவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.