பிரதமர் மோடியின் ஹெல்த் டிப்ஸ்; பிஸியோதெரபி உடன் யோகா கத்துக்கோங்க!

அகமதாபாத்தில் நடைபெற்ற 60 வது பஸியோதெரபி மாநாட்டில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது பேசியவர்; பிஸியோதெரபி நாட்டிற்கு பல நல்ல செய்திகளை கற்றுக்கொடுப்பதாக உள்ளது. அதில் இருக்கும் தொடர் முயற்சி போன்றவை நாட்டின் முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று.

பிஸியோதெரபியின் முதல் விதியே தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது தான். பொதுவாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என மக்கள் ஆசைப்பட்டு அதன் காரணமாக முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆர்வமாக செய்து வருவார். அதற்கு பிறகு தொடர்ச்சியாக செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

ஆனால், பிஸியோதெரபியை பொறுத்தவரைக்கும் அவ்வாறு இருக்க முடியாது. தினந்தோறும் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தான் பலன் கிடைக்கும். அதே போல தான் நாட்டின் முன்னேற்றமும். தொடர்ந்து உழைத்து வந்தால் தான் நாட்டிற்கு முன்னேற்றம் கிடைக்கும்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி; எனக்கும் சில சமயங்களில் பிஸியோதெரபியின் உதவி தேவைபடும். ஆனால் நான் அதனை யோகாவின் உதவியுடன் செய்வேன். யோகா மற்றும் ஆசனங்கள் இரண்டுமே மனித உடலில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் வல்லமை கொண்டவை.

கர்ஜித்த கரூர் எம்பி ஜோதிமணி… 9 வருஷம் ஆனாலும் மறக்கமாட்டோம் என ஆவேசம்!

பிஸியோதெரபியை கற்றுக்கொடுப்பவர்கள் மக்களுக்கு சரியான பயிற்சியை, சரியான முறையில் கற்றுக்கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார். பிஸியோதெரபி மூலம் நாடும், நாடு மக்களும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.

மனிதனுக்கு எந்த சூழ்நிலையும் இருக்க கூடிய சவால்களை காட்டிலும் அவனது மனதின் நம்பிக்கை மற்றும் அவனது தைரியம் என்பது முக்கியமானது. ஒரு மனிதனுக்கு கஷ்டமான சூழ்நிலையில் பக்கபலமாக இருப்பதன் மூலமும், அவனுக்கு சின்ன ஆறுதல் அளிப்பதன் மூலமும் அவன் கடினமான சூழ்நிலையை கடந்து வர முடியும் என மோடி தெரிவித்தார்.

துருக்கி மற்றும் சிரியா நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இருப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். பலர் காயங்களுடன் போராடி வருகின்றனர். நாடு மக்கள் தங்கள் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் பிஸியோதெரபி செய்வோரின் உதவி அவர்கள் எல்லாருக்கும் தேவைப்படும். அப்போது நீங்கள் அனைவருக்கும் உதவி செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.

என்னுடைய இந்த அரசாங்கம் பல்வேறு உதவிகளை நாடு மக்களுக்கு செய்துள்ளது. வங்கி கணக்குகளை திறக்க உதவி உள்ளது, நாட்டுமக்களுக்கு கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளது, மருத்துவ வசதிக்கு என பல்வேறு திட்டங்களை செய்துள்ளது என பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.