“கேரளாவில் குஸ்தி, திரிபுராவில் தோஸ்தியா..?” – காங்கிரஸ் இடதுசாரி கூட்டணியை விளாசிய பிரதமர் மோடி..!

திரிபுராவில் காங்கிரஸ் இடதுசாரி கூட்டணியை கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் இரு கட்சிகளும் மோதிக் கொள்வதாகவும், திரிபுராவில் நட்பு கொண்டுள்ளதாகவும் விமர்சித்தார்.

அகர்தாலாவில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, திரிபுராவில் பா.ஜ.க, அரசின் பலன்களை பெறாத குடும்பமே இல்லை என்றும், மாற்றத்திற்கான அரசியலை பா.ஜ.க நம்புவதாகவும், பழிவாங்கும் அரசியலை அல்ல என்றும் கூறினார்.

2வது முறையாக திரிபுராவில் பாஜக ஆட்சி தொடர்ந்தால் மத்திய அரசு அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.