வாஷிங் மெஷினில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை.. சோப்புத் தண்ணீரை குடித்ததால் உடல்நிலை பாதிப்பு..!

டெல்லியில், துணி துவைப்பதற்காக சோப்புத்தூளோடு சேர்த்து தண்ணீர் நிரப்பப்பட்டு திறந்திருந்த வாஷிங் மெஷின் உள்ளே விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை அதற்குள் 15 நிமிடம் இருந்த நிலையில், அவனுக்கு 19 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

வாஷிங் மெஷினை அவரது தாயார் திறந்து வைத்திருந்த நிலையில், அருகிலிருந்த நாற்காலியில் ஏறிய குழந்தை உள்ளே விழுந்து சோப்புத்தண்ணீரை குடித்ததாக கூறப்படுகிறது.

குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது அவரது உடல் நீல நிறமாக இருந்ததோடு, இதயத்துடிப்பு பலகீனமாக இருந்ததாகவும் தெரிவித்த மருத்துவர்கள்,சுயநினைவு இல்லாமல் கோமாவில் இருந்த குழந்தையை ஒரு வாரம் வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்த பின்னரே அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாகவும், தற்போது, குழந்தை நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.