திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது.!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி 72 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பணத்தை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே ஹரியானாவில் வைத்து 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

குர்திஷ் பாஷா, அஷ்ரப் உசேன் ஆகிய அந்த இருவரும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.