போதைப்பொருள், கள்ளநோட்டு வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 72 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

டெல்லி: நாடு முழுவதும் 72 இடங்களில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள், கள்ளநோட்டு கடத்தல்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ சோதனை நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள ரவுடிகளையும், அவர்களுடன் தொடர்பில் உள்ள பயங்கரவாத கும்பலை பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம், பிலிபிட்டில் ஆயுதம் சப்ளையர் ஒருவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பாகிஸ்தானில் இருந்து சப்ளை செய்யப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஷ்காரில் நிலக்கரி கொண்டுவர மாமூல் வசூலித்ததாக கூறப்படும் வழக்கில், அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.