அதானி குழுமம் விவகாரத்தில் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஊடகங்களுக்கு எங்களால் தடை விதிக்க முடியாது எனவும், எங்கள் தீர்ப்பை மட்டுமே வழங்குவோம் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்தபோது தலைமை நீதிபதி அமர்வு இதனைத் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஊடகங்களுக்கு எதிராக நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை. நாங்கள் செய்ய வேண்டியதை செய்வோம். நாங்கள் எங்கள் உத்தரவை மட்டும் பிறப்பிப்போம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருந்ததாவது, 
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் குழு அமைக்கப்படும் வரை ஊடக அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று எம்.எல்.சர்மா தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது சதியின் விளைவா இல்லையா என்பதை விசாரிக்கும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் சர்மா கூறியிருந்தார் 

இதற்குப் பிறகும் அதானி குழுமம் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதுபோன்ற அறிக்கைகளால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார். அதனால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை அதானி குழுமம் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது:
இந்த வாதங்களை நிராகரித்த தலைமை நீதிபதி, ‘எங்கள் உத்தரவை ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ளோம், அதை அறிவிப்போம். சரியான காரணத்தைக் கூறுங்கள். ஊடகங்களுக்கு தடை விதிக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது பிப்ரவரி 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. பின்னர் தீர்ப்பு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.