அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டையைச் சேர்ந்த முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.