எச்சரிக்கை! இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்!!

நாடு முழுவதும் பரவலாக காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட சில மாத்திரைகளை சாப்பிட வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு(IMA) சுற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் H3N2 வைரஸ் பரவி பருவகால காய்ச்சல், சளி, இருமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் இருக்கும். 3 வாரம் வரை தொடர வாய்ப்பு இருக்கிறது.

இந்த நோய் காற்று மாசு காரணமாக ஏற்படுகிறது என்றும், பருவ கால சளி காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்து மாத்திரைகளை தர கூடாது என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

நோயாளிகள் Azithromycin and Amoxiclav மாத்திரைகளை பருவ கால வைரஸ் காய்ச்சலுக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை. அதே போல், amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளக்கூடாது என கூறியுள்ளது.

மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் கை, கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்திருக்குமாறும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.