"இதற்கு யாரும் காரணமில்லை"- விபரீத முடிவெடுத்த திமுக கவுன்சிலரின் மகன்

தாம்பரம் மாநகராட்சி 18-வது வார்டு திமுக கவுன்சிலரின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகுதியையடுத்த கீழ்க்கட்டளை, திருவள்ளுவர் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் பிரேமலதா (57). இவர், தாம்பரம் மாநகராட்சி 18-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவரது மகன் கோபிநாத் (29), பொறியியல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு செல்போன் பேசிவிட்டு வருவதாகக் கூறி மாடிக்குச் சென்றவர். நீண்ட நேரமாகியும் கீழே வராததால் மேலே சென்று பார்த்துள்ளனர்.
image
அப்போது கோபிநாத் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற மடிப்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
உயிரிழந்த கோபிநாத்-க்கு திருமணம் ஆகாத நிலையில், வீட்டில் அவருக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், “என் சாவுக்கு யாரும் காரணமில்லை, எனக்கு இந்த வாழ்க்கை புடிக்கல. லவ் யூ டாடி. மிஸ் யூ, சாரி” என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை – 600 028.

தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.