முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வட மாநிலத்தவர்கள்.. டிக்கெட் வாங்கியவர்கள் வீட்டிற்கு திரும்பிய பரிதாபம்

ஹோலி பண்டிகை வரும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், ரயில்களில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர். மேலும் முன்பதிவு செய்யாமல் சாதாரண வகுப்பு பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு முன்பதிவு செய்யும் பெட்டிகளில் ஏறி பயணம் செய்வதால், முறையாக முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சேலம் வழியாக சென்ற எர்ணாகுளம்-பரௌனி செல்லும் ரப்திசாகர் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஏறிக் கொண்டனர்.

இந்த ரயில் மாலை 6.16 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தது. அப்போது முன்பதிவு பெட்டியில் (எஸ்.4) நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் ஏறி பயணித்தனர். ரயில் புறப்படும் நேரத்தில் அதில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனே பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர்.

இதில் முன்பதிவு பெட்டியில் வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்தனர். இதையடுத்து முன்பதிவு செய்யாமல் பயணித்த சுமார் 140-க்கும் மேற்பட்டவர்களை ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். இதனால் சுமார் அரை மணி நேர தாமதத்திற்குப் பின் அந்த ரயில் புறப்பட்டு சென்றது.இதனால் சேலம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலில் வடமாநில தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே ஆலப்புழா-தன்பாத் ரயில் நேற்று மாலை 3 மணி அளவில் சேலம் ரயில் நிலையம் வந்தது. அப்போது முன்பதிவு பெட்டியில் வடமாநில தொழிலாளர்கள், முறையாக முன்பதிவு செய்யாமல் பயணித்தனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களுக்கும், முன்பதிவு செய்து பயணித்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள் விரக்தியுடன் காணப்பட்டனர்.

ரயில் போலீசாரம் டிக்கெட் பரிசோதர்களும் எவ்வளவு சொல்லியும் வட இந்தியர்கள் கீழே இறங்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ஒரு கட்டத்தில் அவர்களை கீழே இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இதனை எடுத்து முன் பதிவு செய்தவர்கள் சிலர் ரயிலை விட்டு கீழே இறங்கி பயணத்தை ரத்து செய்து மீண்டும் வீட்டுக்கு சென்ற பரிதாப சூழ்நிலையும் ஏற்பட்டது இதன் காரணமாக சுமார் 20 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது. இந்த நிலைமை தொடருமானால் ரயில் பயணம் பாதுகாப்பான பயணம் என்பது கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் அரசும் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ரயில் பயணம் என்பது பாதுகாப்பான பயணம் என்பதை உறுதி செய்ய முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.