கொலை வழக்கில் சாட்சியை கொன்ற மற்றொரு குற்றவாளி என்கவுன்டரில் கொலை| Another accused who killed a witness in a murder case was encounter killing

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பிரயாக்ராஜ்-உத்தர பிரதேசத்தில், எம்.எல்.ஏ., கொலை வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ்பால் கொலை வழக்கில் போலீசாரல் தேடப்பட்டு வந்த இரண்டாவது கெலையாளி உஸ்மான் இன்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக ராஜு பால் என்பவர், கடந்த 2005 ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் முக்கி சாட்சியான உமேஷ்பால் கடந்த பிப்.26-ல் பிரயாக்ராஜ் நகரில் தன் சொகுசுக் காரில் வந்திறங்கிய உமேஷ் பால் என்பவரை, பின்புறமாக வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தப்பியோடினர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புக்குவந்த இரு போலீசார் காயமடைந்தனர்.

latest tamil news

போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பிரபல தாதாவும், முன்னாள் எம்.பி.,யுமான அதிக் அஹமது என்பதும். இவர்குஜராத் சிறையில் தற்போது தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கின் ”குற்றவாளிகளை பிடிக்க எட்டு தனிப்படை போலீசார் , கொலைாளிகளை தேடி வந்த நிலையில் கடந்த வாரம் அர்பாஸ் என்பவனை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இந்நிலையில் மற்றொரு கொலையாளியான உஸ்மான் என்பவனை போலீசார் இன்று என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். ஏற்கனவே அர்பாஸ் என்ற குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று மற்றொரு குற்றவாளி உஸ்மான் என்கவுன்டர் செய்யப்பட்டது உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.