சர்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு!

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடிகர் ஆர்யா நடித்து வெளியான திரைப்படம் 'சர்பட்டா பரம்பரை'. இத்திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகாமல் அமேசான் ஓடிடியில் வெளியானது.இந்த படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிகர் ஆர்யா நடித்திருந்தார். அறிமுக நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையி​ல்​ இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது .இந்த படத்திலும் ஆர்யாவே கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித் .அந்த படத்தின் பணியைத் முடித்துவிட்டு இந்த படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.