கடந்த டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சனிக்கிழமைகளில் பள்ளி இயங்கும் நாட்களை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாளை சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (11.03.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.