திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்த கைதிகள் – நடந்தது என்ன?

திருச்சியில் உள்ள மத்திய சிறையில் கடந்த ஆறு ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் கடந்த 6ம் தேதி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். 

இதைப்பார்த்த திருச்சி சிறைத்துறை அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. இந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு அம்பாள் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியாரான இவர் மீது கடந்த 2013ம் ஆண்டு தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. 

அந்த வழக்கில் அவருக்கு பதினைந்து நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 24 ந்தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் பதினைந்து நாள் காவல் முடிந்து நேற்று விடுதலையாக வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கையை சிறைத்துறை அதிகாரிகள் செய்து வந்தனர். 

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். ஒரே நாளில் இரு கைதிகள் இறந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.