ரவுடி கொலையில் தொடர்புடைய நபரை பிடிக்க சென்ற போலீசாரை கொடுவாளால் தாக்கிய ரவுடி.. சுட்டு பிடித்த காவல் ஆய்வாளர்.!

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபரைப் பிடிக்க சென்ற உதவி காவல் ஆய்வாளரை கொடுவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற குற்றவாளியை காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

பூவனூர் ராஜ்குமார் என்பவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவின் தஞ்சை மாவட்டம் மனோரா என்ற இடத்தில் பதுங்கி இருந்துள்ளான்.

அவனை கைது செய்ய முயன்ற தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவை பிரவின்  வெட்டி உள்ளான். இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் தனது கை துப்பாக்கியால் பிரவினை சுட்டு பிடித்தார்.

காயமடைந்த  காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் பிடிபட்ட பிரவீன்  இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.