செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.3.2023 வியாழக்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.0.2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் தலைமையில் நடைபெற உள்ளது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன் பெறலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.