ஐடி ஊழியர்களை மிரட்டி ஐபோன், லேப்டாப் வழிப்பறி… 3 இளைஞர்கள் கைது

மதுரை அருகே ஐடி ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி ஐபோன், லேப்டாப்பை வழிப்பறி செய்ததுடன்  ஜி பே மூலம் பத்தாயிரம் ரூபாய் பணம் பறித்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் ஐ டி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உதகையைச் சேர்ந்த முகமது தானிஷ் என்பவர்  நண்பர்களுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கீழக்குயில் குடி சமணர் படுகை மற்றும் மலை மேல் உள்ள சிற்பங்களை காண சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியைகாட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த செல்பேசி உள்ளிட்ட பொருட்களை பறித்துள்ளனர்,  பின்னர் பொருட்களை பெற ஜிபே மூலம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தியதையும் எடுத்து கொண்டு தப்பி ஓடினர்.

இதையடுத்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, ஜிபே எண்களை வைத்து  மதுரை காளவாசலைச் சேர்ந்த விமல்,  விராட்டிபத்து பகுதியை சேர்ந்த பார்த்திபன், சம்மட்டி புரத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் ஆகிய 3 பேரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.