திரிபுரா எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் பிரதிமா

அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவை எம்எல்ஏ பதவியை ஒன்றிய அமைச்சர் பிரதிமா பவுமிக் ராஜினாமா செய்தார். திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் 31 இடங்களில் வென்று பா.ஜ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.  மாணிக் சகா 2வது முறையாக முதல்வரானார். சட்டப்பேரவை தேர்தலில் தான்பூர் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பிரதிமா பவுமிக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இன்றும், நாளையும் திரிபுரா சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை இடைக்கால சபாநாயகர் பினாய் பூஷன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தான்பூர் தொகுதியில் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.