ஏடிஎம் சென்றவரிடம் கொள்ளை : மேலும் ஒருவர் கைது!!

சென்னை : சென்னை தேனாம்பேட்டையில் கடந்த ஜனவரி 20ம் தேதி ஏடிஎம்-ல் பணம் செலுத்த சென்ற மைதீன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில், திருவான்மியூரை சேர்ந்த சங்கர் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இவர் மீது கொலை உட்பட 16 வழக்குகள் ஏற்கனவே உள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். இந்த வழக்கில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜான் ஜெய் சிங், தண்டையார்பேட்டையை சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.