ஆன்லைன் சூதாட்டம்! சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது : மத்திய அரசு

Online Gambling Ban Law: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் அளித்த விளக்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

மக்களவையில் எம்.பி பார்த்திபன் அவர்கள் ஆன்லைன் சூதாட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். அப்பொழுது சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. பந்தயம், சூதாட்டம் இரண்டும் அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருகிறது என விளக்கம் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.