கூட்டணிக்கு நோ.. ஆனாலும் வாழ்த்து தெரிவித்த அன்புமணி… ஈபிஎஸ் எதிர்பார்த்திருப்பாரா..?

தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கெதிராக

தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. அந்த வழக்கின் மீது தீர்ப்பளித்த தனி நீதிபதி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிமுக கூடிய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்தார்.

மேலும், பொதுக்குழு தேர்தல் முடிவுவை வெளியிடலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக தேர்தல் அலுவலர்களான பொள்ளாச்சி ஜெயராமனும், நத்தம் விசுவநாதனும் பொதுச்செயலாளர் சான்றிதழை ஈபிஎஸ்-க்கு வழங்கினார்கள்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டில் பாமக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட அன்புமணி ராமதாஸ் அதிமுகவுக்கு எதிராக அறிக்கைகளை விட்டார். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்பதோடு 2024 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் பாமக புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.