செங்குன்றம் அருகே பரிதாபம்..! ஒரே கயிற்றில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை..!

செங்குன்றம் அருகே பங்குச்சந்தையில் பணத்தை இழந்ததால் கணவன்-மனைவி ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் லெனின் நகர் பகுதியில் சேர்ந்தவர் முருகேசன் (45). இவரது மனைவி ஜெயந்தி (40). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் முருகேசன் பங்குச் சந்தையில் பணத்தை இழந்ததால், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து முருகேசன் மற்றும் அவரது மனைவியும் செங்குன்றம் அருகே எல்லம்மன்பேட்டை பகுதியில் உள்ள தந்தைக்கு சொந்தமான வீட்டை சுத்தம் செய்து விட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், கணவன்-மனைவி இருவரும் அந்த வீட்டில் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீசார், உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.