Keerthy Suresh: இதுக்கெல்லாம் காரணம் நயன்தாராதான்… போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இரு மொழிகளிலும் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்களின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் கீரத்தி சுரேஷ்.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Pranitha: மூக்கும் முழியுமா… கல்யாணத்திற்கு பிறகும் ஹாட்.. பிரணிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தெலுங்கில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். எந்த மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் அதில் சமீப காலமாக நடிகைகள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த கிரெடிட்டை நயன்தாரா மேடம்முக்குதான் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன் என பதில் அளித்துள்ளார்.

Nayanthara: அதுல கொஞ்சம் கூட உண்மையில்லை… நயன்தாரா குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

ஏனென்றால் அவர்தான் அந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்தார். நான் தவறாக கூறவில்லை என்றால் மாயா என்ற படத்தில் இருந்து தான் அது மாறத் தொடங்கியது. நயன்தாரா அதை செய்ததால்தான் மற்ற நடிகைகளுக்கும் இதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நயன்தாராவால் தான் நிறைய பெண்கள் தங்களால் சிறந்த ஒன்றை கொடுக்க முடியும் என்று நினைத்தார்கள், ” இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது தசரா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தசரா படத்தில் வெண்ணிலா என்ற கதாப்பாத்திரத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்தை ஒடெல்லா ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேண் சமீபத்தில் தசரா படப்பிடிப்பின் கடைசி நாளில் 130 தங்க நாணயங்களை படக்குழுவினருக்கு பரிசாக வழங்கினார். இந்த தங்க நாணயங்களின் மொத்த மதிப்பு 70 லட்சம் ரூபாய் ஆகும்.

Vijay: படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே சொல்லிக்காமல் போன ஜோதிகா… வருத்தப்பட்ட விஜய்!

தசாரா திரைப்படம் தெலுங்கானாவின் கோதாவரிகானி அருகே உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தின் பின்னணியில் உருவாகிறது. இந்த இடத்தை நடிகர் நானி சமீபத்தில் “தூய்மையான, பழமையான மற்றும் அட்ரினலின்-ரஷ்” என்று குறிப்பிட்டிருந்தார். டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நானி, “கடந்த ஆண்டு, தெலுங்கு சினிமாவில் இருந்து RRR வந்தது, KGF மற்றும் Kantara கன்னட சினிமாவில் இருந்து வந்தது. 2023-ல் தெலுங்கு சினிமாவில் இருந்து தசரா வரும் என்று நம்பிக்கையுடனும் பெருமையுடனும் சொல்லுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.