கிரீஸ் நாட்டில் உணவு விடுதி மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர் கைது!

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மத்தியப் பகுதியில் உள்ள யூதர் உணவு விடுதி மீது தாக்குதல் நடத்த முயன்றதாக பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பலரைக் கொல்ல சதி செய்ததாக அவர்கள் மீது தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இருவரிடமும் விசாரணை நடத்தி வரும் போலீசார், சதியில் தொடர்புடைய மற்றொரு நபர் தேடப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். துருக்கி வழியாக ஊடுருவிய இரு தீவிரவாதிகளும் நான்கு மாதங்களாக கிரீஸில் தங்கி சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.