Leo: படக்குழு பட்ட கஷ்டத்தால் மனம்மாறிய விஜய்..லியோ படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்

​பிரம்மாண்டம்விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் தளபதியுடன் இணைகிறார் என்றவுடன் அந்த எதிர்பார்ப்பிற்கு அளவே இல்லாமல் போனது. எங்கு திரும்பினாலும் லியோ படத்தை பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மிகப்பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை அசால்டாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடத்தி வருகின்றார் லோகேஷ்

​முதல்கட்டம் முடிவு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன் , மிஸ்கின் என பல நட்சத்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டது. ஆக்ஷன் கிங் அர்ஜுனை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.சில நாட்களுக்கு முன்பு தான் முதல்கட்ட ​படப்பிடிப்பு
காஷ்மீரில் முடிவடைந்தது. இந்த செய்தியை படக்குழு ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்டது. இதையடுத்து சென்னையில் அடுத்த வாரம் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது

​கஷ்டம் காஷ்மீரில் கடும் குளிரில் படக்குழு ஒரு நாள் கூட வீணாகாமல் படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதற்கு உறுதுணையாக இருந்த படக்குழு காஷ்மீரில் சந்தித்த சாவல்களை ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்டனர். அந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை லியோ படக்குழுவினரின் அயராத உழைப்பை பாராட்டி தள்ளினர். படத்தில் நடிக்கும் நடிகர்களை போலவே படத்திற்கு பின்னால் உழைப்பவர்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது இந்த வீடீயோவை பார்க்கும்போது பலருக்கு தெரியவந்தது. குடும்பங்கள், சொந்த பந்தங்களை பிரிந்து பல நாட்களாக கடுமையான சூழலில் உழைத்து வந்த இவர்களுக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன

​மனம்மாறிய விஜய் இந்நிலையில் காஷ்மீரில் படக்குழு சந்தித்த சவால்களையும், கஷ்டங்களையும் உணர்ந்த விஜய் லியோ படப்பிடிப்பில் பிளானை மாற்றியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்டு ஆந்திராவில் அவுட்டோர் படப்பிடிப்பை நடத்த லோகேஷ் திட்டமிட்டிருந்தாராம். காஷ்மீரில் அவுட்டோர் படப்பிடிப்பில் படக்குழு பட்ட கஷ்டத்தை பார்த்த விஜய், இனி அவுட்டோர் படப்பிடிப்பு வேண்டாம், சென்னையிலேயே மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் என லோகேஷிடம் கூறிவிட்டாராம். இதனை லோகேஷும் ஏற்றதாக தெரிகின்றது. இந்நிலையில் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது போக போக தான் நமக்கு தெரியவரும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.