எடப்பாடி வெற்றி எப்படி சாத்தியமானது? சென்னை டூ டெல்லி… லாபி செய்த 3 மாஜிக்கள்!

அதிமுகவின் 6வது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு விட்டார். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி தற்போது ஈபிஎஸ் கைகளுக்கு வந்துள்ளது. ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை என அதிமுகவில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட இரட்டை தலைமைக்கு அச்சாரம் போடப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையில் தொடக்கம் முதலே இணக்கமான போக்கு இல்லை.

அதிமுக பொதுக்குழுஇது கடந்த ஆண்டு மத்தியில் விஸ்வரூபம் எடுத்தது. ஜூலை 11, 2022 அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தமிழக அரசியல் வரலாறு அவ்வளவு எளிதாக மறக்காது. அந்த அளவிற்கு அதிரி புதிரி சம்பவங்கள் அரங்கேறி அதிமுகவை புரட்டி போட்டது. இரட்டை தலைமை ஒற்றை தலைமையை நோக்கி திரும்பியது.
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிஇதையடுத்து சட்டப் போராட்டங்கள் இன்று வரை தொடர் கதையாகியுள்ளன. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நாற்காலியில் அமர்ந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதன் பின்னணியில் பலரின் ஒத்துழைப்பும், தீவிரமான காய் நகர்த்தல்களும், டெல்லி லாபியும் இருந்தாலும் மூன்று பேரின் செயல்பாடுகளை முக்கியத்துவம் வாய்ந்ததாக அதிமுகவின் சீனியர்கள் சிலர் எடுத்து வைக்கின்றனர்.
கே.பி.முனுசாமிகட்சியின் விதிகள் திருத்தப்பட்டது, ஓ.பன்னீர்செல்வத்தின் வியூகங்களை சமாளிக்கும் வகையில் புதிய யுக்தியை கையாண்டது என எடப்பாடி பழனிசாமிக்கு பலமான ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆனதும் முதல் கையெழுத்து எதில் போட வேண்டாம் என்ற திட்டத்தையும் வகுத்திருக்கிறார். அதன்படி, அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வேலைகளை முடுக்கி விடும் வகையில் முக்கியமான கையெழுத்தை எடப்பாடி போட்டுள்ளார்.

சி.வி.சண்முகம்அதிமுகவில் நடைபெற்று வரும் அனைத்து சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்பார்வை செய்து எடப்பாடிக்கு வெற்றி தேடி தரும் வகையில் வாத, பிரதி வாதங்களை முன்வைக்க உதவியுள்ளார். எதிரணியில் நடக்கும் விஷயங்களை அவ்வப்போது கவனித்து, அதற்கேற்ப தங்கள் தரப்பு வாதத்தை திறம்பட நீதிமன்றத்தில் எடுத்து வைக்க முக்கிய பங்காற்றியுள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்புஇதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. கடைசியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஜூலை 11, 2022 அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பிறப்பித்தது.
எஸ்.பி.வேலுமணிஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை டெல்லி செல்வாக்கை வைத்து கொண்டு அதிமுகவில் ஆட்டம் காட்டி கொண்டிருந்தார். தொடக்கம் முதலே பாஜக தலைவர்கள் பலரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தான் நின்று வந்தனர். இதனை அப்படியே தலைகீழாக மாற்றியதில் வேலுமணிக்கு முக்கிய பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் தனக்கிருக்கும் செல்வாக்கின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் முக்கியத்துவத்தை அங்கு எடுத்துரைத்து வந்துள்ளார்.
​​
இந்த மூன்று மாஜிக்கள்குறிப்பாக எடப்பாடியின் ஆளுமை, அரசியல் வியூகம், தேர்தல் திட்டங்கள், டெல்லி அரசியலில் எடப்பாடியின் தேவை போன்ற விஷயங்களை விவரமாக எடுத்து சொல்லி சாதித்து காட்டியுள்ளார். இந்த மூன்று பேரும் தான் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் நாற்காலியில் அமர அதிக முக்கியவத்துவம் வகித்ததாக அதிமுக தலைமைக்கு நெருக்கமான சில தலைவர்கள் கூறியுள்ளனர்.​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.