சென்னை: அதிமுகவில் இருந்து விலகியதில் வருத்தம் தான் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி என்னை அதிமுகவிற்கு அழைத்தார். எடப்பாடி பழனிசாமி எனக்கு நல்ல நண்பர் என்று அவர் தெரிவித்தார். பாஜகவில் தன்னுடைய நிலையை வெளிப்படுத்த நயினார் நாகேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
