நாகப்பட்டினம்: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக குருத்தோலை பவனி விழா தொடங்கியது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
