கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு மரண தண்டனை..!

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

2017ஆம் ஆண்டு, ஒரு கிலோ கஞ்சா கடத்தலுக்கு துணை போன குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தங்கராஜு சுப்பையாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

கஞ்சா கடத்தலில் அவர் நேரடியாக ஈடுபடாததால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மேல் முறையீடு செய்யப்பட்டது. இருந்தபோதும், அந்நாட்டு சட்டப்படி, போதை பொருள் கடத்தலுக்கு துணைபோவோரும் கடத்தல்காரராகவே கருதப்படுவதால் தங்கராஜுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

கடந்தாண்டு, போதை பொருள் கடத்தலுக்காக அங்கு 11 பேர் தூக்கிலிடப்பட்ட நிலையில், இந்தாண்டு முதல் முறையாக தங்கராஜ் சுப்பையாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.