சென்னை அணி மிரட்டல் பந்துவீச்சு..! 135ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத்

சென்னை,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக ஹார்ரி புரூக் , அபிஷேக் சர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அபிஷேக் சர்மா , திரிபாதி இணைந்து சிறப்பாக விளையாடினார்.

தொடர்ந்து ஆடிய அபிஷேக் சர்மா 34 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் திரிபாதி 21ரன்களும் , கேப்டன் மார்க்ரம் 12ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து சென்னை அணி சிறப்பாக பந்துவீசியதால் மயங்க் அகர்வால் 2 ரன்களும் , ஹென்றிச் கிளாசன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 134ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , ஆகாஷ் சிங், பதிரனா , தீக்ஷனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.