‘சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர்’ – வெளியுறவுத்துறை தகவல்

உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இந்தியர்கள் சுமார் 3,500 பேரும், இந்திய வம்சாவளியினர் 1,000 பேரும் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சூடானின் நிலைமையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக 3வது கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் தர்காஷ், சூடான் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சூடான் ராணுவமும் துணை ராணுவப்படையினரும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து, ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தின் கீழ் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அதன்படி, சூடானில் இருந்து இதுவரை 670 இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகர் வழியாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.