ரஷ்ய அதிபர்: ‘எங்க தலைக்கு தில்ல பாத்தியா’.. 6வது முறையாக கொலை முயற்சியில் தப்பித்தார்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்றுடன் தொடர்ந்து ஆறாவது முறையாக கொலை முயற்சியில் இருந்து தப்பித்துள்ளார்.

உக்ரைன் போர்

உக்ரைனில் ரஷ்யா போர் தொடங்கி 15 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மக்களில் பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர். இந்த அத்தைனை சேதங்களுக்கும் காரணம் அமெரிக்கா தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைன் சேர இருப்பதாக சம்மதம் தெரிவித்ததால் போர் தொடங்கியது.

எங்கோ இருக்கும் அமெரிக்கா ரஷ்யாவின் எல்லையில் தனது தலைமையிலான ராணுவத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயமென்ன என்பதே ரஷ்யர்களின் கேள்வியாக உள்ளது. எப்போதும் போல் போரை தொடங்கி பேரழிவை ஏற்படுத்தும் அமெரிக்கா, இந்த முறையும் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அலுவலகமான சிவப்பு சதுக்கத்தில் (Red Square) உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

கொலை முயற்சி

அதிர்ஷடவசமாக யாருக்கும் எந்த நிகழவில்லை என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் நேட்டோவில் இணைந்த பின்லாந்திற்கு சென்றுள்ளார், மேலும் இன்னும் சில நாட்கள் அங்கேயே தங்குவதாக அறிவித்துள்ளார். அதேசமயம், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா இதுவரை உக்ரைனின் அரச மாளிகைகளை தாக்கியதில்லை. இந்தசூழலில் ரஷ்யாவின் தலைமையகத்தை உக்ரைன் தாக்கியுள்ளது. அதுவும் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரை வென்று போரை முடிவிற்கு கொண்டுவந்ததை ரஷ்யா கொண்டாடும் வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடதக்கது. இனி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

6 முறை

கொலை தாக்குதலில் ரஷ்ய அதிபர் தப்பித்தது இது முதல்முறை அல்ல, இதற்கு முன் ஐந்து முறை தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் கருங்கடல் பகுதியில் ரஷ்ய அதிபர் புடினை கொல்ல உக்ரைன் தாக்குதல் நடத்தியது, அதிலிருந்து அவர் தப்பித்தார். அதேபோல் 2002ம் ஆண்டில் அஜர்பெய்ஜான் நாட்டில் அதிபர் புடின் சென்ற போது, ஈராக் நாட்டைச் சேர்ந்த நபர் புடினை கொல்ல முயன்ற போது பிடிபட்டார்.

அதேபோல் 2003ம் ஆண்டு இங்கிலாந்து தீவிரவாத ஒழிப்பு போலீஸில் இருந்த இருவர் அதிபர் புடினை கொல்ல முயன்றனர். அதில் ஒருவர் ரஷ்யாவின் புலனாய்வு அமைப்பில் செயல்பட்டவர் ஆவார். கடந்த 2012ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது உக்ரேனிய புலனாய்வு அமைப்பின் உறுப்பினரால் கொலை முயற்சி செய்யப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டு கூட காரில் 40 கிலோ வெடி பொருட்களுடன் அதிபர் புடின் செல்லும் வழியில் சுற்றித் திரிந்த காரை போலீசார் சிறைபிடித்ததும் குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.