Jailer: ஜெயிலர் படத்தில் நெல்சன் வைத்திருக்கும் ட்விஸ்ட்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்பிரைஸ்..!

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள்
ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டாலும் ஆகஸ்ட் மாதமே தான் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. நெல்சன் மற்றும் ரஜினி இருவருக்கும் கட்டாயம் வெற்றி தேவை என்பதால் படத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளனர்.

Manobala: நம்பி ஏமாந்துட்டேன் சார்..மனோபாலாவிடம் மனம்விட்டு பேசிய தளபதி..!

அதன் காரணமாகவே படப்பிடிப்பு துவங்க தாமதமானதாக தகவல் வந்துள்ளது. மேலும் நெல்சனின் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப காத்துக்கொண்டிருக்கிறார் நெல்சன்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அதைப்போல ரஜினியின் நடிப்பில் சமீபகாலமாக வெளியான திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை. எனவே ரஜினியும் ஜெயிலர் படம் தன்னை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பியுள்ளார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதமே ஜெயிலர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பை படக்குழு டீசரின் மூலம் அறிவித்துள்ளது. தற்போது இந்த டீசர் தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக இருக்கின்றது. இதையடுத்து இப்படத்தில் நெல்சன் சர்ப்ரைஸாக ஒரு விஷயத்தை வைத்துள்ளாராம். அதாவது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் அவரும் ஜெய் இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

ஆனால் அவர் நடிப்பதாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காடவில்லை. எனவே அவர் ஜெயிலர் படத்தில் சர்ப்ரைஸாக வருவார் என்றும், அவரின் கதாபாத்திரம் தான் படத்தில் பல திருப்பங்களை கொண்டுவரும் என்றும் தகவல்கள் வருகின்றன.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோதே ஜெய் இதில் நடிக்கின்றார் என்று ஒரு தகவல் வந்தது. ஆனால் அதன் பின் எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் ஜெய் சர்ப்ரைஸான ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் அவரின் பெயரை படக்குழு அறிவிக்கவில்லை என சில செய்திகள் வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது படம் வெளியான பின்னரே தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.