Naga Chaitanya: சமந்தா அருமையானவர், அவருடன் வாழ்ந்த வாழ்க்கை மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்: நாக சைதன்யா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Naga Chaitanya interview: தானும், முன்னாள் மனைவியான சமந்தாவும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை பற்றி நாக சைதன்யா கூறியது அனைவரையும் கவர்ந்துவிட்டது.

​கஸ்டடி​வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்திருக்கிறார் நாக சைதன்யா. மே 12ம் தேதி ரிலீஸாகும் அந்த படத்தை விளம்பரம் செய்து வருகிறார். கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். போலீஸ் கான்டபிள் சிவாவாக நாக சைதன்யா நடித்திருக்கும் கஸ்டடி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகவிருக்கிறது. விளம்பர நிகழ்ச்சிகளில் நாக சைதன்யாவிடம் முன்னாள் மனைவி சமந்தா பற்றி கேட்கப்படுகிறது.
ஐஸ்வர்யா தத்தாமேடையில் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா!
​சமந்தா​சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பிரிந்துவிட்டார்கள். அவர்கள் விவாகரத்து பெறுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சமந்தாவை பிரிந்த பிறகு பொன்னியின் செல்வன் படம் புகழ் சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக பேசப்படுகிறது. ஆனால் அந்த காதலை சம்பந்தப்பட்ட இருவரும் இதுவரை உறுதி செய்யவில்லை.
​நாக சைதன்யா​பேட்டி ஒன்றில் நாக சைதன்யா கூறியிருப்பதாவது, நானும், சமந்தாவும் அந்த கட்டத்தை விட்டு வந்துவிட்டோம். எங்களுக்கு இடையேயான விஷயங்களை மீடியா யூகிக்கும்போது தான் ஒரு மாதிரி இருக்கிறது. என் கடந்த காலத்துடன் தொடர்பலில்லாத மூன்றாவது நபர் ஒருவரை கொண்டு வந்து அதன் மூலம் தலைப்புச் செய்தியாக்குகிறார்கள். அது அந்த மூன்றாவது நபரை அவமதிப்பதாகும் என்றார்.
​பாராட்டு​Moideen Bhai: மொய்தீன் பாயாக மும்பை திரும்பிய பாட்ஷா பாய்: தரமான சம்பவம்நாக சைதன்யா மேலும் கூறியதாவது, சமந்தா ஒரு அருமையான மனுஷி. அவர் வாழ்வில் அனைத்து சந்தோஷமும் கிடைக்க வேண்டும். நான் சமந்தாவுடன் சேர்ந்து வாழ்ந்த அந்த வாழ்க்கை மீது அதிக மரியாதை வைத்திருக்கிறேன் என்றார். அவர் சமந்தா பற்றியும், அவருடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் உயர்வாக பேசியது அனைவரையும் ஈர்த்துவிட்டது.

​விவாகரத்து​சமந்தாவுக்கும், தனக்கும் விவாகரத்தாகி ஓராண்டு ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார் நாக சைதன்யா. சமந்தாவை பிரிந்த நாளில் இருந்து இதுவரை எப்பொழுதுமே பேட்டிகளில் அவரை பற்றி கேட்டாலும் நல்லவிதமாக பேசுகிறார். தற்போதும் சமந்தாவை விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார் நாக சைதன்யா. தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா தான் என்றும் கூறினார்.
​கோலிவுட்​கஸ்டடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் நாக சைதன்யா. இந்த படம் அவருக்கு கை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை. இது வழக்கமான வெங்கட் பிரபுவின் ஜாலியான படம் இல்லையாம். நாக சைதன்யா, அரவிந்த்சாமி இடையேயான ஆட்டம் தான் கஸ்டடியாம். படம் பயங்கர விறுவிறுப்பாக செல்லுமாம். தியேட்டருக்கு செல்பவர்களுக்கு புது அனுபவம் கிடைக்கும் என்று அடித்துச் சொல்கிறது கஸ்டடி படக்குழு.

​வெங்கட் பிரபு​Custody: கஸ்டடி கதைலாம் பெருசா இல்ல, பாட்டி வடை சுட்ட கதை தான்: வெங்கட் பிரபுகஸ்டடி படத்தின் கதை குறித்து வெங்கட் பிரபு உண்மையை சொல்லிவிட்டார். கதை எல்லாம் பெரிதாக இல்லை. பாட்டி வடை சுட்ட கதை தான். ஆனால் அதை எப்படி சுட்டார் என்பதை வித்தியாசமாக காட்டியிருக்கிறோம் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அவர் இப்படி வெளிப்படையாக பேசுவது அனைவருக்கும் பிடித்திருக்கிறது. கஸ்டடி மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார் வெங்கட் பிரபு.

​கதை​வில்லன் இறந்துவிடாமல் ஹீரோ பார்த்துக்கொள்ள வேண்டும். அது தான் கஸ்டடி படத்தின் கதை. வில்லனை காப்பாற்றுவதை தவிர ஹீரோவுக்கு வேறு வழியே இல்லை. 48 மணிநேரத்தில் நடக்கும் விஷயத்தை தான் படத்தில் காண்பித்திருக்கிறோம் என்றார் வெங்கட் பிரபு. ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேருமே சிவப்பானவர்கள். அதனால் அவர்களின் கிளாமரை குறைத்து காட்டியிருக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.