திருடி விடுவார்களோ என அச்சம்.. பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 பழமையான கார்கள் ஏலம்..!

வெளி உலகிற்கு தெரியாமல், பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 பழமையான கார்கள் நெதர்லாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளன.

பழமையான கார்களை சேகரிப்பதை வாடிக்கையாகக் கொண்ட பால்மென், அவற்றை யாரேனும் திருடி விடுவார்களே என்ற அச்சத்தில், எங்கேயும் எடுத்து செல்லாமல் குடோனில் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார். அதனால், கார்கள் பழுதாகிவிடக்கூடாது என்பதற்காக கார் எஞ்சினை முறையாக ஸ்டார்ட் செய்துவந்துள்ளார்.

வயதாகி நோய்வாய்பட்டதாலும், வாரிசுகள் இல்லாததாலும் அவற்றை கார் டீலர் ஒருவரிடம் அண்மையில் பால்மென் விற்றுவிட்டார். தற்போது அந்த கார்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுவருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.