செந்தில் பாலாஜி.. 5 நாட்களுக்கு பிறகு வந்த நல்ல சேதி… காவேரி மருத்துவமனை முக்கிய தகவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 21 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்த காவேரி மருத்துவமனை அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக தெரிவித்தது.

நேற்று முன்தினம் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அகற்றப்பட்டதாகவும் இருப்பினும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியூவில் தான் இருக்கிறார் என்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியூவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி குழாய் வழியாக உணவு எடுத்துவந்த நிலையில், இன்று அவரே உணவு எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நீதிமன்றம் அல்லது புழல் சிறை அனுமதி பெற்று செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள தனி வார்டில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவிது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.