திருமணம் தாண்டிய உறவுகள் பெரும்பாலும் விபரீதத்தில் முடிந்துவிடுகிறது. அதுவும் கர்நாடகா மாநிலத்தில் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த தனது நண்பரை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சிக்காபெல்லாபூர் என்ற இடத்தில் இந்த கொடிய சம்பவம் நடந்திருக்கிறது. அங்கு வசிக்கும் விஜய், தனது நண்பர் மரேஷ்(Maresh) தனது மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டார். இதற்காக தனது நண்பரை பழிவாங்க விஜய் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்.

இது குறித்து பேசுவதற்காக மரேஷுக்கு விஜய் அழைப்பு விடுத்திருந்தார். விஜயுடன் அவரின் நண்பர் ஜான் என்பவரும் சென்று இருந்தனர். விஜயும், ஜானும் சேர்ந்து மரேஷை அங்குள்ள வனப்பகுதி ஒன்று அழைத்து சென்றனர். காட்டில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே விஜய் தன்னிடம் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து மரேஷ் கழுத்தை அறுத்தார். உடனே கீழே விழுந்த மரேஷ் கழுத்தில் இருந்து வந்த ரத்தத்தை விஜய் குனிந்து குடித்தார். அதோடு மட்டுமல்லாது காயம் அடைந்த மரேஷை விஜய் அடித்து உதைத்தார்.
இந்த நிகழ்வுகளை விஜயுடன் சென்ற ஜான் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். பின்னர் அதனை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிட்டார். அந்த கொடூர வீடியோ வேகமாக பரவியதை தொடர்ந்து போலீஸார் விரைந்து செயல்பட்டு விஜயை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜய் மீது தற்போது, கெஞ்சர்லஹள்ளி காவல் நிலையத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம், இந்த சம்பத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக்கொண்ட மகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.