பிரபல இளம் யூடியூபர் தேவராஜ் படேல் சாலை விபத்தில் மரணம்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர்

ராய்ப்பூர்:
சத்தீஸ்கரை சேர்ந்த பிரபல இளம் யூடியூபர் தேவராஜ் படேல் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துள்ளார். இதனால் இந்தியா முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் தேவராஜ் படேல் (22). இவர் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சினிமா பஞ்ச் வசனங்களை பேசுவது, சமைப்பது, வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செய்வது, நண்பர்களுடன் சேர்ந்து காமெடி செய்வது என யூடியூபையே இவர் ஒரு கலக்கு கலக்கி வந்தார். சற்று குள்ளமாகவும், குண்டாகவும் இருப்பதால் தேவராஜ் படேல் செய்வது அனைத்தும் குபீர் சிரிப்பை வரவழைக்கும். இதனால் யூடியூப் ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அவருக்கு ரசிகர் பட்டாளங்கள் குவியத் தொடங்கின.

அவரது யூடியூப் சேனலுக்கு 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாவில் 57 ஆயிரம் ஃபாலோவர்ஸ்களும் உள்ளனர். இந்நிலையில், இன்று மதியம் ஒரு புதிய வீடியோ எடுப்பதற்காக தனது நண்பனுடன் தேவராஜ் படேல் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி, அவர்களின் பைக் மீது மோதியது.

“விதைப்பையை நசுக்குவது கொலை முயற்சி அல்ல”.. சண்டைனா அப்படி இப்படிதான்யா இருக்கும்.. நீதிமன்றம் உத்தரவு

இதில் தூக்கியெறியப்பட்ட தேவராஜ் படேலுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி தேவராஜ் படேல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது மரணச் செய்தியை கேட்டு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது கடைசி வீடியோ இன்று காலை வெளியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.