STR50:சிம்புவின் எஸ்.டி.ஆர். 50 படத்தை இயக்கும் மணிரத்னம், தயாரிக்கும் கமல்?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டு வந்த பிறகு சிம்புவின் கெரியர் படுவேகமாக பிக்கப் ஆகிவிட்டது என்றே கூற வேண்டும். ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து கெத்து காட்டி வருகிறார் சிம்பு.

பாலாவுடன் Dance ஆடிய நடிகை சுனைனா!
சிம்புவின் எஸ்.டி.ஆர். 48 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க, உலக நாயகன் கமல் ஹாசன் தன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் அந்த படத்திற்காக வெளிநாட்டிற்கு சென்று தற்காப்பு கலை எல்லாம் கற்றுவிட்டு வந்திருக்கிறார் சிம்பு.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எஸ்.டி.ஆர். 48 படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு என கூறப்படுகிறது. அந்த படத்தை ஐசரி கணேஷ் தன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கிறார். இதையடுத்து சிம்புவின் 50வது படமான எஸ்.டி.ஆர். 50ஐ யார் இயக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் எஸ்.டி.ஆர். 50 படத்தை இயக்கப் போவது வேறு யாருமில்லை மணிரத்னம் தான் என கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தையும் கமல் ஹாசன் தான் தயாரிக்கப் போகிறாராம். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார் சிம்பு.

இதையடுத்து இரண்டாவது முறையாக மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாராம். ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் கே.ஹெச். 234 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிம்பு. அதை தான் எஸ்.டி.ஆர். 50 என சமூக வலைதளங்களில் தவறாக கூறுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இந்த குழப்பம் தீரும்.

இதற்கிடையே சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது. சிம்பு தன் தயாரிப்பில் பல படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டு டேட்ஸ் கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் அளித்தார்.

இதையடுத்து பிரச்சனை எதற்கென்று ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் சிம்பு. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும், கவுதம் மேனனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இனி கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவே மாட்டேன் என்றாராம் சிம்பு.

தற்போது ரெட் கார்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதால் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமியின் படத்திற்காக கடுமையாக ஒர்க்அவுட் செய்து வருகிறாராம். அந்த படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அடேங்கப்பா, சிம்புவை நம்பி கமல் ஹாசன் இப்படி காசை தண்ணீராக செலவு செய்ய முன்வந்திருக்கிறாரே. சிம்பு மீது ஆண்டவருக்கு அம்புட்டு நம்பிக்கையா என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

Arjun: அர்ஜுன் மகளுக்கும், தம்பி ராமையா மகனுக்கும் எப்படி பழக்கம், திருமணம் எப்பொழுது?:விபரம் இதோ

எந்த பிரச்சனை வந்தாலும் சிம்புவின் கெரியர் பாதிக்கப்படாது. அவருக்கு ஆண்டவன் ஆசி இருக்கிறது என சிம்பு ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.