மாமன்னன் படத்திற்கு மாரி செல்வராஜ் முதல் முதலில் வைத்த டைட்டில் இதுதானாம்..இதுவும் நல்லா இருக்கே..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உதயநிதியின் நடிப்பில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன். வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

உதயநிதி
நடிக்கும் கடைசி படம் என்பதாலும், வடிவேலு வித்யாசமான ரோலில் நடித்துள்ளார் என்பதாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையில் இப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

மாமன்னன் டைட்டில்

விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை மாமன்னன் திரைப்படம் பெற்றுள்ளது. இதுவரை மாமன்னன் திரைப்படம் ஐம்பது கோடிவரை வசூலான நிலையில் உதயநிதியின் திரைவாழ்க்கையிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக மாமன்னன் திரைப்படம் உருவெடுத்துள்ளது.

Maamannan: உதயநிதியின் இந்த மனசு வேறு யாருக்கும் வராது..மாமன்னன் மூலம் மனதை வென்ற உதயநிதி..!

இந்நிலையில் இப்படத்தை பற்றியும், இப்படம் உருவான விதத்தை பற்றியும் படக்குழுவினர் பல விஷயங்களை பேசி வருகின்றனர். அந்த வகையில் மாமன்னன் என்ற தலைப்பு உருவான விதம் பற்றி பேசியுள்ளார் மாரி செல்வராஜ். அவர் கூறியதாவது, மாமன்னன் படத்திற்கு முதலில் நான் மன்னாதி மன்னன் என்ற தலைப்பை தான் வைத்திருந்தேன்.

அதை நான் உதயநிதியிடம் கூறிய போது இந்த டைட்டில் செட் ஆகுமா என கேள்விகேட்டர். அதன் பிறகு மன்னாதி மன்னன் என்ற தலைப்பை மாமன்னன் என மாற்றினேன். மேலும் கதைக்கும் அது பொருத்தமாக இருந்தது. மாமன்னன் என்ற தலைப்பை வைத்த பிறகு தான் எனக்கு படம் நான் நினைத்ததை போல வரும் என்ற திருப்தி வந்தது என்றார் மாரி செல்வராஜ்.

உருவான விதம்

மேலும் மாமன்னன் என்ற டைட்டிலை வைத்த பிறகு நான் சொல்லவேண்டிய விஷயங்களை தெளிவாக என்னால் சொல்ல முடிந்தது என்றும், திரைக்கதையில் சில விஷயங்களை என்னால் எளிதில் புகுத்த முடிந்தது என்றும் கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் மாமன்னன் படத்தின் கதையை மாரி செல்வராஜ் தன் தந்தையை மனதில் வைத்து தான் உருவாக்கினாராம். இதனை அவரே மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.