கேரளாவில் கனமழையால் சால்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

திருவனந்தபுரம்,

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பழசி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், அதிரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.