கேரளாவுக்கு இன்னைக்கு கடைசி நாள்… தமிழ்நாட்டுல நாளையிலேருந்து… சூப்பர் தகவல் சொன்ன வெதர்மேன்!

தமிழகத்தில் நாளை முதல் மழை வெளுத்து வாங்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

பருவமழைதென்மேற்கு பருவ மழை நாடு முழுவதும் பரவி தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தீவிரமடைந்துள்ள கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
​​மண்சரிவுகனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
​​எச்சரிக்கைகனமழை காரணமாக இடுக்கி, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம். மேலும் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்த பருவமழை காலத்தில் மட்டும் மழை பாதிப்பால் இதுவரை 11 பேர் கேரளாவில் பலியாகியுள்ளனர்.​​
மஞ்சள் எச்சரிக்கைதொடர் மழையால் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் அணைகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமையான இன்று காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு இன்று இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
​​தமிழ்நாடு வெதர்மேன்கேரளாவில் தீவிரமடைந்துள்ள பருவமழையால் அதனை ஒட்டியுள்ள எல்லை பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது குறிப்பாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தமிழ் நாடு வெதர்மேன் கேரளா மற்றும் தமிழகத்திற்கான மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
​​கடைசி நாள்இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கேரளாவில் கடைசி நாளான இன்று கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக பதிவிட்டுள்ளார். கபினி அணையின் வயநாடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். மேலும் வடகேரளத்தின் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.நாளைக்கு சம்பவம்நாளை முதல் கேரளாவில் மழை குறைந்து தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கும் என்றும் தமிழ் நாடு வெதர்மேன் தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார். நாளை கேடிசி பெல்ட் அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்கள் மற்றும், உட்புறங்களில் வெப்பச்சலன மழை பெய்யத் தொடங்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.​வெதர்மேன் டிவீட்​​நாளை முதல்…​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.