சிங்கப்பூரில் மோகன்லால் தம்பதியை சந்தித்த ராதிகா

நடிகர் மோகன்லால் சில நாட்களுக்கு முன்பு, தான் நடித்து வந்த மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா கிளம்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகை ராதிகாவும் சிங்கப்பூரில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே மோகன்லால் தம்பதியை நேரில் சந்தித்த ராதிகா அந்த மகிழ்ச்சியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எண்பதுகளில் மோகன்லாலுடன் இணைந்து மலையாளத்தில் நடித்த ராதிகா அதன்பிறகு சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான இட்டிமானி மேட் இன் சைனா என்கிற படத்தில் மீண்டும் மோகன்லால் உடன் இணைந்து நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.