Kaavaalaa: ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு இருக்கும் ஒரே குறை இதுதானாம்..பிரிவினால் வாடும் தலைவர்..!

ரஜினி நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது. தமன்னா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி ஆகியோர் நடித்து வந்தனர்.

இதையடுத்து மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் ஜெயிலர் படத்தில் இணைந்தனர். இதைதொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் பான் இந்திய படமாக உருவெடுத்தது.

ஜெயிலர் பாடல்

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. இதனையொட்டி இப்படத்தில் இருந்து காவாலா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது.

Maaveeran: மாவீரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்..அடேங்கப்பா..!

இருந்தாலும் ரஜினியின் பாடல் வெளியாகாமல் தமன்னாவின் பாடல் முதலில் வெளியாகி இருப்பது சிலருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பாடல் சிறப்பாக இருந்ததால் அந்த குறை தற்போது நீங்கியுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை போட்டு பார்த்த ரஜினிக்கு படம் மிகவும் பிடித்துள்ளதாம்.

ஆனாலும் படத்தில் ஒரே ஒரு குறை மட்டும் ரஜினிக்கு இருக்கின்றதாம். அதாவது இதுவரை ரஜினி நடித்த அனைத்து படங்களிலும் மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். குறிப்பாக ரஜினியின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் தான் பாடுவார்.

எஸ்.பி பாலசுப்ரமணியம் இல்லாத வருத்தம்

அப்பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும். அதாண்டா இதாண்டா, நான் ஆட்டோ காரன், வந்தேண்டா பால்காரன் என பல பாடல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். குறைந்தது ரஜினியின் ஒரு படத்தில் இரண்டு பாடல்களாவது எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். கடைசியாக ரஜினியின் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திலும் ஓப்பனிங் பாடலை எஸ்.பி சுப்பிரமணியம் தான் பாடியிருந்தார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் பாடல் இல்லாததை நினைத்து வருந்துகிறாராம் ரஜினி. இந்நேரம் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் இருந்திருந்தால் ஜெயிலர் படத்தில் கண்டிப்பாக ஒரு பாடலாவது பாடியிருப்பார். அது இல்லாதது தான் ரஜினிக்கு ஜெயிலர் படத்தில் ஒரு குறையாக இருப்பதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.