செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு: நீதிபதி எழுப்பிய கேள்வி!

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கியதால் இன்று மூன்றாவது நீதிபதி முன்னர் விசாரணை நடைபெற்றது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.

அவரை கைது செய்த போது முறையான எந்த தகவலும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா வழக்கு தொடர்ந்தார்.

மூன்றாவது நீதிபதி விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இன்று (ஜூலை 11) இந்த வழக்கு சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

ராணுவ வீரருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

கபில் சிபல் வாதம்!

செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். “செந்தில் பாலாஜி குற்றம் செய்ததால் கிடைத்த பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்திருப்பதாகவோ ஆதாரம் இல்லை. குற்றம் செய்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரங்கள் முழுமையாக இல்லாதபோது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கைது செய்ய முடியாது. அதேபோல், கைதான 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்தி ஆதாரங்களை சீல்வைத்த கவரில் நீதிமன்றத்தில் தர வேண்டும்” இவ்வாறு அவர் வாதிட்டார்.

ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளபோது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?’ எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த கபில் சிபல், “இது குறித்து பின்னர் முழுமையான வாதங்கள் வைக்கப்படும். காவல்துறை அதிகாரிகள் போல் அமலாக்கத்துறை அதிகாரிகள் செயல்பட முடியாது” என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.